தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர்களுக்கு வெகுமதியளித்த எஸ்.பி!

விழுப்புரம்: சமூக அக்கறையோடு செயல்பட்ட காவலர்களை, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

Villupuram SP

By

Published : May 27, 2019, 4:05 PM IST

விழுப்புரம் மாவட்டத்தில் மாதம் இருமுறை சமூக அக்கறையோடு செயல்படும் காவலர்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்குவது வழக்கம்.

காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்

அதன்படி, மாவட்டத்தில் இரு வாரங்களாக கொலை, சாதி மோதல், மதுபான பாட்டில்கள் கடத்தல் போன்றவைகள் ஏற்படவிடாமல் தடுத்தல், காணாமல் போன சிறுவன் மற்றும் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தல் போன்ற செயல்களில் சிறப்பாக செயல்பட்ட திண்டிவனம், அவலூர்பேட்டை, செஞ்சி, வளத்தி, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி காவல் நிலையங்களில் பணி புரியும் 36 காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details