தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளைஞர் கழுத்தறுத்து கொலை - கிணற்றில் சடலம் மீட்பு

வேலூர்: இளைஞர் ஒருவர் கழுத்துறுத்த நிலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Murder

By

Published : Jul 23, 2019, 11:42 PM IST

வேலூர் மாவட்டம் ஜம்புகுளம் அருகே உள்ள விவசாயக் கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாக கொண்டப்பாளையம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு வந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினரின் உதவியோடு சடலத்தை மீட்டனர்.

அதன்பின், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அந்த நபர் சோளிங்கர் ஜம்புகுளம் அடுத்த காட்ரம்பாக்கம் மோட்டூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுப்பிரமணி என்பதும் ஓட்டுநராக வேலைபார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details