வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் தனது கணவர் மற்றும் 5 மாத குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், கணவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால், அடிக்கடி குடித்துவிட்டு பிரியாவை அவர் அடிப்பதும் வாடிக்கையாக இருந்திருக்கிறது. இதனால், மனம் விரக்தியடைந்த பிரியா, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாணியம்பாடியில் ஐந்து மாத குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை
வேலூர்: வாணியம்பாடி அருகே ஐந்து மாத குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
5 மாத குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை
இது குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் அம்பலூர் காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிரியாவின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஐந்து மாத குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.