வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த புதுமண்டிப் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன். இவர் காலை நேரத்தில் ஆம்பூர் ரயில் நிலையம் நோக்கி தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
தண்டவாளத்தில் நடந்து சென்ற முதியவர் - ரயில் மோதி உயிரிழப்பு!
வேலூர் : ஆம்பூரில் வேகமாக வந்த ரயில் முதியவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரயில் மோதி முதியவர் உயிரிழந்தார்
அப்போது சென்னை நோக்கி சென்ற ரயில் மோதியதில் தூக்கி வீசப்பட்ட முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திக்கு விரைந்து வந்த ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க : தண்டவாளத்தில் விரிசல்: வேலூரில் ரயில்கள் தாமதம்