வேலூர்:வாலாஜாபேட்டையில் காணாமல் போன 4ஆம் வகுப்பு பள்ளி மாணவனை, நண்பனின் வீட்டில் இருந்து போலீசார் மீட்டுப் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பூக்காரத் தெருவைச் சேர்ந்தவர் விஜய். இவரது மகன் கிரண், அதே பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று (ஜனவரி 18) பள்ளிக்குச் சென்ற மாணவன், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து, மாணவனின் பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்ததில், வகுப்பறையில் புத்தகப்பையை வைத்துவிட்டு, சிறுநீர் கழிப்பதாகச் சென்று வருவதாகக் கூறிச் சென்ற மாணவன், அதன் பிறகு இங்கே வரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.