தமிழ்நாடு

tamil nadu

வேலூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... எங்கெல்லாம் செல்கிறார் தெரியுமா?

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 7:50 AM IST

பல்வேறு நலத் திட்ட பணிகளை தொடங்கி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் சென்று உள்ளார். அவர் வருகையை முன்னிட்டு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வேலூர் நகரில் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்க போலீசார் தடை விதித்து உள்ளனர்.

drones-banned-from-flying-in-vellore-ahead-of-cm-mk-stalin-visit
முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ..வேலூரில் ட்ரோன்கள் பறக்க தடை

வேலூர்:வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா இன்று (செப். 17) நடைபெறுகிறது. இதனையடுத்து 3ஆயிரம் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கபட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.79.70 கோடியில் கட்டப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை இன்று (செப். 17) திறந்து வைத்து பயனாளிகளிடம் ஒப்படைக்கவும், பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு (செப். 16) ரயில் மூலம் வேலூருக்கு சென்றார்.

முதலமைச்சர் வருகையையொட்டி வேலூர் மாவட்டத்தில் 3ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்போருக்காக தமிழக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி வேலூரை அடுத்த மேல்மொணவூரில் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ.142.16 கோடியில் மொத்தம் 3 ஆயிரத்து 510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில் தற்போது கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி வேலூரை அடுத்த மேல்மொணவூரிலுள்ள இலங்கைத் தமிழர் முகாமில் நடைபெறுகிறது.

இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று காணொலிக் காட்சி மூலம் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கைத் தமிழர் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 வீடுகளை திறந்து வைக்க உள்ளார். மேலும், மேல்மொணவூர் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளையும் பயனாளிகள் வசம் ஒப்படைக்க உள்ளார்.

தொடர்ந்து பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் திமுக முப்பெரும் விழா காலை தொடங்கி இரவு வரை நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த விழாவில் முதலமைச்சர் பங்கேற்று முத்தமிழறிஞர் கலைஞர் அறக்கட்டளை சார்பில் தமிழகத்தின் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர்களில் கட்சி பணியைச் சிறப்பாக செய்த தலா ஒருவருக்கு நற்சான்றிதழ், பண முடிப்புகளை வழங்குகிறார்.

மேலும், திமுக சார்பில் பெரியார் விருது - கி.சத்தியசீலன், அண்ணா விருது - க.சுந்தரம், கலைஞர் கருணாநிதி விருது - ஐ.பெரியசாமி, பாவேந்தர் பாரதிதாசன் விருது - மல்லிகா கதிரவன், பேராசிரியர் க.அன்பழகன் விருது - ந.ராமசாமி ஆகியோருக்கு வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழா சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலர் துரைமுருகன், முதன்மைச் செயலர் கே.என். நேரு, துணைப் பொதுச் செயலர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்பட பல்வேறு அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் காட்பாடி வந்தடைந்தார். ரயில் நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து தனியார் உணவகத்தில் தங்கும் அவர் இன்று (செப். 17) நடைபெறும் விழாக்களில் பங்கேற்றுவிட்டு மீண்டும் இரவு ரயில் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

இதையும் படிங்க:மோடி அரசு முழு தோல்வி அடைந்துள்ளது..! காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கார்கே கடும் விமர்சனம்!

ABOUT THE AUTHOR

...view details