தமிழ்நாடு

tamil nadu

குடிபோதையில் கார் ஓட்டிய நபர் மின்கம்பத்தில் மோதி பலி!

By

Published : Oct 9, 2019, 10:32 AM IST

வேலூர்: இராணிப்பேட்டை அருகே குடிபோதையில் காரை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்


வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டை பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(24). இவர் தனது நண்பர்கள் சாய்கிருஷ்ணா, பாண்டியன், மோகன் ஆகியோரை காரில் ஏற்றிக்கொண்டு வாலாஜாபேட்டை நோக்கிச் சென்றுள்ளார்.

குடிபோதையில் இருந்த சுரேஷ், காரை அதிவேகமாக ஓட்டியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த மின் கம்பத்தின் மீது மோதியுள்ளது. இதில், சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளான கார்

மேலும், அங்கிருந்த பொதுமக்கள் காரில் இருந்தவர்களை மீட்டு வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சுரேஷின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க : மரம் தூக்கும் ராட்சத இயந்திரம் மோதி ஒருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details