தமிழ்நாடு

tamil nadu

அத்திவரதர் தரிசனத்திற்கு பிறகு ஏற்பட்ட கொடூரம்!

வேலூர்: அத்திவரதரை தரிசித்துவிட்டு வீடு திரும்பும்போது நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

By

Published : Aug 15, 2019, 7:01 AM IST

Published : Aug 15, 2019, 7:01 AM IST

விபத்து

வேலூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கூட்டுச்சாலை ஓரம் நின்றுக்கொண்டிருந்த லாரி மீது காஞ்சிபுரத்திலிருந்து பெங்களூர் நோக்கி சென்ற கார் பின்பக்கம் பயங்கரமாக மோதியது. இதில், காரை ஓட்டிவந்த பெங்களூருவைச் சேர்ந்த மோகன்ராவ் (65) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

அத்திவரதர் தரிசனத்திற்கு பிறகு ஏற்பட்ட கொடூர விபத்து!

இதுகுறித்து தகவலறிந்த நாட்றம்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காரில் பயணம் செய்த மோகன் ராவின் மனைவி உட்பட 4 பெண்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்துவிட்டு பெங்களூர் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் உடற்கூறாய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details