தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குப்பை இல்லாத நகரமாக மணக்கப்போகும் திருச்சி!

பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு அலுமினியம் எவர்சில்வர் பழைய எலக்ட்ரானிக் சாதனங்களை நேரடியாக வீடு வீடாக சென்று வாங்கும் புதிய திட்டத்தை மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று தொடங்கி வைத்தார்.

By

Published : May 17, 2022, 6:05 PM IST

குப்பை இல்லா நகரமாக மணக்க போகும் திருச்சி !
குப்பை இல்லா நகரமாக மணக்க போகும் திருச்சி !

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாக வீடுகளுக்குச் சென்று பிளாஸ்டிக் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள், இதர பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட பொருட்கள், இரும்பு அலுமினியம் எவர்சில்வர் பழைய எலக்ட்ரானிக் சாதனங்கள் என அனைத்தையும் மகளிர் சுய உதவிக்குழு மூலம் நேரடியாக வீடு வீடாக சென்று வாங்கும் புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் வீடுகளில் சேரக்கூடிய அனைத்து உபயோகமற்ற பொருட்களையும் பணமாக்கும் ஒரு புதிய திட்டத்தை “தி மணி பின்” என்ற நிறுவனத்தோடு சேர்ந்து செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வீடுகள்தோறும் சென்று சேகரிக்கக் கூடிய ஒவ்வொரு கிலோ பழைய பொருட்களுக்கும் 12 ரூபாய் வீதம் நிர்ணயிக்கப்பட்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஈடுபட உள்ளனர்.

எனவே, முதல்கட்டமாக மாநகராட்சி மேயர் அன்பழகனின் வார்டான 27ஆவது வார்டில் உள்ள பட்டாபிராமன் சாலையில் உள்ள வீடுகளுக்கு மக்கும் மஞ்சள் நிற பிளாஸ்டிக் பைகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். பொதுமக்களிடம் வீட்டில் சேரக்கூடிய பழைய பொருட்களை இந்தப் பைகளில் சேகரித்து வைக்க அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பேசிய மாநகராட்சி மேயர் அன்பழகன், “வீடுகளில் சேமிக்கப்படும் இந்த பழைய பொருட்கள் அனைத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களால் 15 நாட்களுக்கு ஒரு முறை நேரடியாக சென்று அவற்றை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

எனவே, இதன் மூலம் வழக்கமாக மாநகராட்சி மூலம் சேகரிக்கப்படும் குப்பையின் அளவு குறைந்து மக்கும் குப்பைகள் மட்டுமே சேகரிக்க கூடிய பணிகள் இனி வரக்கூடிய காலங்களில் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குப்பை இல்லாத நகரமாக மணக்கப்போகும் திருச்சி!

இந்தத் திட்ட தொடக்க விழாவில் மண்டலக் குழுத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர் திரு எஸ். செல்வபாலாஜி , சுகாதார அலுவலர் , மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டப் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க :தமிழ்நாட்டில் முதல்முறை: குன்னூரில் சிறிய இயந்திரம் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கும் பணி

ABOUT THE AUTHOR

...view details