தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார் மோதி தொழிலாளி பலி!

திருச்சி: மணப்பாறை அருகே நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் அய்யாசாமி என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது நான்கு வயது பேத்தி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

By

Published : May 25, 2019, 10:46 PM IST

தொழிலாளி பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரியில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்கும் பணியைச் செய்து வந்தவர் அய்யாசாமி. இன்று காலை தனது நான்கு வயது பேத்தி வைஷ்ணவியை அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் பணிசெய்யும் மகள், மருமகன் ஆகியோரிடம் காண்பிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது, திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, இவர்களின் இருசக்கர வாகனம் மீது பின்பக்கமாக மோதியது. இதில், அய்யாசாமியும் சிறுமியும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்த அய்யாசாமி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது பேத்தி வைஷ்ணவி தலையில் பலத்த காயமடைந்தார். இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த துவரங்குறிச்சி காவல் துறையினர் சிறுமியை மீட்டு மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, விபத்தில் உயிரிழந்த அய்யாசாமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், காரில் வந்தவர் சென்னை கோடாம்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details