தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப்பேருந்து மோதி முதியவர் பலி - போலீசார் விசாரணை

திருச்சி: மணப்பாறை அருகே அரசுப்பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மாராச்சி என்பவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

மரணம்

By

Published : Jul 27, 2019, 5:13 PM IST

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் மாராச்சி(75). இவர் தனது பேரன் பிரசன்னகுமாரை இருசக்கர வாகனத்தில் அழைத்து கொண்டு திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை மலையடிபட்டி பிரிவில் சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியிலிருந்து பழனியை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மாராச்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல்துறையினர், படுகாயமடைந்த பிரசன்னகுமாரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் உயிரிழந்த மாராச்சி உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details