உலகப் புகழ்பெற்ற கல்லணையில் ஒவ்வொரு ஆண்டும் 12ஆம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து 15 அல்லது 16ஆம் தேதிகளில் கல்லணையில் டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டு பன்னிரெண்டாம் தேதி மேட்டூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவைத்தார். அதைத்தொடர்ந்து 16ஆம் தேதி காலை 11 மணிக்கு கல்லணையில் தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.