தமிழ்நாடு

tamil nadu

திருச்சியில் விமான நிலையத்தில் 2 கிலோகிராம் தங்கம் பறிமுதல்!

By

Published : Nov 3, 2019, 3:55 PM IST

திருச்சி: சர்வதேச விமான நிலையத்தில் ரூ. 78.25 லட்சம் மதிப்புள்ள சுமார் 2 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

trichy gold seized

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஏா் ஏசியா விமானத்தில் பயணிகளை, மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள் வழக்கம் போல சோதனை செய்தனர்.

அப்போது திருச்சியைச் சேந்த ஜெசிமா (36) என்பர் பசையிலும் உள்ளாடைக்குள் மறைத்தும் ரூ. 29.63 லட்சம் மதிப்புள்ள 766 கிராம் தங்கத்தைக் கடத்தி வந்தது தெரிய வந்தது.

அதேபோல பிரவீன்பானு (45) என்பவரும் ரூ.29.32 லட்சம் மதிப்புள்ள 758 கிராம் தங்கத்தையும், அசன்முகமது (34) ரூ.19.30 லட்சம் மதிப்புள்ள 499 கிராம் தங்கத்தையும் கடத்தி வந்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஒரே நாளில் மட்டும் பல்வேறு வகையில் ரூ. 78.25 லட்சம் மதிப்பிலான 2.23 கிலோ கிராம் தங்கம் கடத்தி வரப்பட்டதாக விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

ABOUT THE AUTHOR

...view details