தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 3, 2020, 10:50 PM IST

ETV Bharat / state

காவல்துறை உயர் அலுவலர்கள் 4 பேர் இடமாற்றம்!

சென்னை : தமிழ்நாட்டின் காவல்துறை உயர் அலுவலர்கள் நான்கு பேரை இடமாற்றம் செய்வதாக தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

காவல்துறை உயர் அலுவலர்கள் 4 பேரை இடமாற்றம்!
காவல்துறை உயர் அலுவலர்கள் 4 பேரை இடமாற்றம்!

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில்,

"வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ரயில்வே காவல் கண்காணிப்பாளராக பிரவேஷ் குமார் ஐ.பி.எஸ்.நியமிக்கப்பட்டுள்ளார். பூக்கடை மார்க்கெட் காவல்துறை இணை காவல் கண்காணிப்பாளராக மகேஸ்வரன் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி ஆக கார்த்திக் ஐ.பி.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details