தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கோவையில் இருந்து திருப்பூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்! - barauni train

Two Special Trains: திருப்பூர், கோவையில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களுக்காக கோவையில் இருந்து திருப்பூர் வழியாக பரவுணி வரை செல்லக்கூடிய இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கோவையில் இருந்து திருப்பூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்
கோவையில் இருந்து திருப்பூர் வழியாக இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2023, 6:56 PM IST

திருப்பூர்: திருப்பூர் மாநகரில் சுமார் இரண்டரை லட்சம் வடமாநிலத் தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தீபாவளி பண்டிகைக்கு தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்புவர். அந்த வகையில், தீபாவளியைத் தொடர்ந்து சாத் பூஜா என்ற வடமாநில பண்டிகை வரும் நிலையில், திருப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக வடமாநிலங்களுக்குச் செல்கின்ற ரயில்களில் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

இந்நிலையில் திருப்பூரில் இருந்தோ, கோவையில் இருந்தோ ரயில்கள் புறப்படாத நிலையில், கேரள மாநிலமான திருவனந்தபுரம், ஆலப்புழா மற்றும் எர்ணாகுளத்தில் இருந்து கோவை, திருப்பூரில் நின்று செல்லும் ரயில்களைத்தான், திருப்பூர் வாழ் வடமாநிலத் தொழிலாளர்கள் நம்பி உள்ளனர். ஆனால் இந்த ரயில்கள் இங்கு வரும்போதே முழுமையாக நிறைந்து வருகிறது.

நிற்க கூட இடம் இல்லாமல் வரக்கூடிய இந்த வடமாநில ரயில்களில் கோவை, திருப்பூரில் இருந்து வடமாநிலம் நோக்கி செல்லக் கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் ஏறுகிறார்கள். அவர்கள் தங்கள் உடலை உள்ளே திணித்தால் மட்டும் போதும் என்று ரயில்களில் ஏறிச் செல்லும் கொடுமையான காட்சிகளை ரயில்தோறும் காண முடிகிறது. ஆனாலும் ரயில்வே நிர்வாகம் இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருந்து வருவதாக, பல குற்றச்சாட்டுகள் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், சாத் பூஜா பண்டிகை கொண்டாட ஏதுவாக கோவை, போத்தனூரில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. இதன்படி, வருகிற 14ஆம் தேதி மற்றும் 21ஆம் தேதி ஆகிய இரண்டு செவ்வாய்கிழமையும், காலை 11.50 மணிக்கு கோவை ஜங்சன் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் புறப்படுகிறது.

இந்த ரயில்கள் இரண்டு நாள் பயணத்துக்குப் பிறகு, வியாழக்கிழமை மதியம் 1 மணிக்கு பரவுணி ரயில் நிலையத்தை அடையும். மேலும், இந்த சிறப்பு ரயில்கள், முழுமையான முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட்ட ரயில்கள் ஆகும்.

காலை 11.50க்கு கோவை ஜங்சனில் புறப்படுகிற சிறப்பு ரயிலானது (வண்டி எண் 06059), மதியம் 12.10 மணிக்கு திருப்பூர் ரயில் நிலையம், மதியம் 1.35 மணிக்கு ஈரோடு ஜங்சன், மதியம் 2.47-க்கு சேலம் ஜங்சன், மாலை 4.45க்கு ஜோலார்பேட்டை ரயில் நிலையங்களில் நிற்கிறது. அதேபோல, மறுமார்க்கமாக வருகிற 16ஆம் தேதியும், 23ஆம் தேதியும் என வியாழக்கிழமைகளில், பரவுணியில் இருந்து இந்த சிறப்பு ரயில்கள் திரும்பப் புறப்படுகிறது.

(வண்டி எண் 06060) இந்த ரயிலில் 15 முன்பதிவில்லாப் பெட்டிகள் இணைக்கப்பட்டு இருப்பதால், பெருமளவு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டுமே தீபாவளி மற்றும் சாத் பூஜை வாரத்தில் திருப்பூரில் இருந்து ஒன்றரை லட்சம் வடமாநிலத் தொழிலாளர்களும், கோவையில் இருந்து பல்லாயிரக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தீபாவளி தினத்தில் திருப்பூர் கடைவீதிகளில் குவிந்த வடமாநிலத் தொழிலாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details