வருகின்ற 26ஆம் தேதி காலையில் சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. காலை 8 மணி முதல் 11 மணி வரை நடைபெற உள்ள இந்த சூரிய கிரகணம் இந்த முறை திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பகுதிகளில் தெளிவாகத் தெரியும் என அறிவியல் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர், ’சுமார் 350 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதிகளில் பெரிய சூரிய கிரகணத்தைக் காணும் வகையில், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சுமார் 25 ஆயிரம் பிரத்யேக கண்ணாடிகள் தயார் செய்யப்பட்டு திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் பொதுமக்களுக்கும் இது வழங்கப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தனர்.