திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அனைத்துத் துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழ்நாட்டில் இந்த ஆண்டு உடுமலை உள்பட மூன்று பகுதிகளில் புதிதாக கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படவுள்ளன.
120 மாணவர்கள் படிக்கக்கூடிய அளவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கல்லூரிகளில் சேருவதற்கான 15 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் ஒருசில தினங்களில் முறையாக கவுன்சிலிங் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும்.