திருப்பூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் இன்று காங்கேயத்தில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில்,
“பொதுத் துறை நிறுவனங்கள் அதிவேகமாகத் தனியாருக்கு விற்கப்பட்டுவருகின்றன. தனியாருக்கு ரயில்வே துறை தாரைவார்க்கப்பட்டால், கட்டணம் பல மடங்கு உயரும். பொருளாதாரத் துறையில் மத்திய அரசு பல தவறுகளைச் செய்துவருகிறது.
மக்களின் கவனங்களைத் திருப்பவே, குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது, அது தேவையில்லாத ஒன்று. ஜிஎஸ்டி வரி முறையில் பல மாற்றங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். இதனால், பல தொழிற்சாலைகள் இயங்க முடியாத சூழல் நிலவுகிறது.
ஹைட்ரோகார்பன் திட்டத்தில் மாநில அரசு நினைத்தால் மத்திய அரசின் தேவையின்றி இந்தத் திட்டத்தை அமல்படுத்தாமல் இருக்கலாம். ஆனால் , எடப்பாடி அரசு அதைச் செய்யாமல் உள்ளது.