தமிழ்நாடு

tamil nadu

கி.வீரமணி மீது தாக்குதல் முயற்சி: இந்து முன்னணியினர் மீது போலீசார் தடியடி!

By

Published : Apr 8, 2019, 11:57 PM IST

திருப்பூர்: திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மீது தாக்குதல் நடத்த முயன்ற இந்து முன்னணியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

tirupur

திருப்பூரில் திராவிடர் கழக தலைவர் வீரமணி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னனியினர் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்து முன்னணியினர் மீது போலீசார் தடியடி!

திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் உரையாற்றும் பொதுக்கூட்டம் கரட்டாங்காடு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த பொதுக்கூட்டத்திற்கு வந்து கொண்டிருந்த கி.வீரமணி காரை வழிமறித்து இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியதையடுத்து போலீசார் இந்து முன்னணியினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, கி.வீரமணி பாதுகாப்புடன் பொதுகூட்ட மேடைக்கு போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details