தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 28, 2020, 10:33 AM IST

ETV Bharat / state

சிறப்பு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து ஏஐடியூசி சுகாதார பணியாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: தூய்மை பணியாளர்களுக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி சுகாதார பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Aituc cleaning workers protest
Aituc cleaning workers protest

தமிழ்நாடு முழுவதும் கரோனா காலத்தில் தூய்மை பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை சிறப்பு ஊதியம் வழங்கப்படவில்லை என திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் உள்ள சுகாதார அலுவலகம் முன்பாக ஏஐடியூசி சுகாதார பணியாளர் சங்கம் சார்பில் இன்று(அக்.28) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏஐடியூசி சுகாதார பணியாளர் ஆர்பாட்டம்

இந்த ஆர்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்க மாநகராட்சி மறுத்து வருவதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு பிடித்தம் செய்தப்படும் பணத்தினை திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.

ஏஐடியூசி சுகாதார பணியாளர்கள்

ABOUT THE AUTHOR

...view details