கோவையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களான ரித்திக், பிரணவ், சுபாஷ், கிருத்திகா, மது உள்ளிட்ட ஐந்து பேர்; தங்களது நண்பர் பிரதாப்பின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் மாவட்டம், கொடுவாயிலுக்கு காரில் வந்தனர். பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு திரும்பிய அவர்களின் கார், திருப்பூர் பொல்லிகாளிபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இவ்விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற சாமிநாதன்(75), அவரது மனைவி ரத்தினம்(65) மற்றும் காரில் சென்ற மாணவர் சுபாஷ்(23) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.