திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை மலை கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. சுதந்திரமடைந்த நாளிலிருந்து 70 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை வசதி இல்லாமல் அக்கிராமத்தினர் அவதிபட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக அமைச்சர்கள் வீரமணி, நிலோஃபர் கபில், மாவட்ட ஆட்சியர் சிவனருள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் கிராம மக்களே மண்சாலை அமைத்தனர்.
இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் அப்பகுதி மக்களை நேரில் சென்று அமைச்சர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினர். மேலும் குடிநீர், ரேஷன் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை தொடங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.