தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதி சான்றிதழ் வழங்கக் கோரி கிராம மக்கள் கோரிக்கை!

திருப்பத்தூர்: ஏலகிரி மலை மற்றும் ஜவ்வாது மலையிலுள்ள கிராம மக்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

By

Published : Nov 22, 2020, 8:35 PM IST

villagers-demand-to-issue-caste-certificate
villagers-demand-to-issue-caste-certificate

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஏலகிரியில் 14க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மாணவ, மாணவிகள் உயர்கல்வி படிக்க இயலாமலும், வேலைக்கு செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சாதி சான்றிதழ் வழங்கக்கோரி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால், எங்களது கோரிக்கைக்கு அரசு இதுநாள் வரை செவிசாய்க்கவில்லை.

அதனால் இப்பகுதியிலுள்ள 14 கிராமங்களைச் சேர்ந்த மலைவாழ் மக்கள், அனைவரும் ஒன்று சேர்ந்து இப்பகுதியிலுள்ள சுற்றுலா தளங்களை தங்கள் வசப்படுத்தி, அதில் வரும் வருமானத்தை எடுத்துக்கொண்டு, அதன் மூலம் எங்களுக்கு தேவையான உதவிகளை ஏற்பாடு செய்துகொள்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: சத்தியமங்கலம் அருகே போலி மதுபானங்கள் விற்பதாக புகார்!

ABOUT THE AUTHOR

...view details