தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, வருவாய்த்துறை, காவல்துறை, சுகாதாரத் துறை உள்பட பல்வேறு துறையினர் கரோன தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணிசெய்யும் அவர்களுக்கு காலை, மதிய உணவு வழங்க ஆம்பூர் அருகே உள்ள தர்ம சாஸ்தா கோவில் நிர்வாகம் தாமாக முன்வந்தது. இதன்படி, தர்மசாஸ்தா கோயில் நிர்வாகிகள் தினமும் ஒவ்வொரு துறையினருக்கும் உணவு வழங்கி வந்தனர்.
இந்நிலையில், சோலூர் நமாஸ்மேடு பகுதியில் உணவின்றி தவித்த 37 பழங்குடியின குடும்பங்களுக்கு, மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முன்னிலையில் அறுசுவை உணவு வழங்கினர்.