நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை 22 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசால் ஒருவர் உயிரிழந்த நிலையில் மூன்று பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டோரில் பெரும்பாலானவர்கள் வேலூர் மாநகராட்சிக்குள்பட்ட ஆர்.என்.பாளையம், கஸ்பா, கொணவட்டம், சைதாப்பேட்டை, ஆகிய பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.