திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் சுங்கச்சாவடி அருகேயுள்ள டீக்கடையில் நேற்று (பிப். 04) இரவு காவலர் உடை அணிந்து வந்த ஒருவர் தான் நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் எனக் கூறியுள்ளார். இந்த தகவல் நாட்றம்பள்ளி காவல் நிலையம் வரை வேகமாக பரவியது. இதையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உண்மையான காவலர்களை பார்த்ததும் தப்பி ஓடமுயன்ற போலி காவல் ஆய்வாளரை, பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவலர்கள் விசாரணை செய்தனர். அதில், அந்த நபர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த முருகதாஸ்(55) என்பதும், இவருக்கு கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், முருகதாஸ் ஒரு நபரை தானே ஏற்பாடு செய்து நடுத்தர மக்களிடம் நெருக்கமாக பழக வைப்பார். அவர்களுடைய பணத்தேவைகளை பயன்படுத்தி அந்த நபர் என்னிடத்தில் ஒருவர் இருக்கிறார், அவரிடம் ஒரு லட்சம் கொடுத்தால் நமக்கு இரண்டு லட்சமாக கொடுப்பார். 5 லட்சம் கொடுத்தால் 10 லட்சமாக உடனே கொடுத்து விடுவார் என்று ஆசை வார்த்தைக் கூறி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அழைத்துச் செல்வார்.