சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு கோழிகளுக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுச் சென்றது.
லாரியை கோயம்புத்தூர், சூலூர் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் ஓட்டிச் சென்றார்.
சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு கோழிகளுக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுச் சென்றது.
லாரியை கோயம்புத்தூர், சூலூர் பகுதியை சேர்ந்த அருண் பிரசாத் ஓட்டிச் சென்றார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ஓ.ஏ.ஆர் திரையரங்கம் சிக்னல் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த லாரி அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், லாரி ஓட்டுநர் படுகாயமடைந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லாரியில் இருந்த லட்சக்கணக்கான உயிர் காக்கும் கோழி மருந்துகள் சாலையில் கொட்டி சேதமடைந்தன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் நகர காவல் துறையினர், விபத்துக் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.