கடந்த நவம்பர் மாதம் 21ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியது. தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த நிவர் புயல் மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து புயலாக மாறியது. இதனிடையே புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நவம்பர் 25 இரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கிய நிவர் புயல், இன்று அதிகாலையில் கரையைக் கடந்தது.
நிவர் புயல் கரையைக் கடக்கும்போது தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கனமழையும், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.