தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 22, 2022, 7:16 AM IST

ETV Bharat / state

வாணியம்பாடியில் கோலாகலமாக நடந்த விழிப்புணர்வு செஸ் போட்டி!

வாணியம்பாடி நகராட்சி சார்பில் தாரை தப்பட்டை முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் சதுரங்கப்போட்டி தொடங்கப்பட்டது.

வாணியம்பாடியில் கோலாகலமாக செஸ் ஓலிம்பியட் போட்டி தொடக்கம்
வாணியம்பாடியில் கோலாகலமாக செஸ் ஓலிம்பியட் போட்டி தொடக்கம்

திருப்பத்தூர்:மாமல்லபுரத்தில்சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வாணியம்பாடி நகராட்சி கே.பி.ஏ பேலஸில் விழிப்புணர்வு சதுரங்கப்போட்டி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். உடன் வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழிப்புணர்வு சதுரங்கப்போட்டியைத்தொடங்கி வைத்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக வாணியம்பாடி நகராட்சி சார்பில் தாரை தப்பட்டை முழங்க மயிலாட்டம், ஒயிலாட்டத்துடன் சதுரங்கப்போட்டி தொடங்கப்பட்டது. இதில் வாணியம்பாடியைச்சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து மாணவ - மாணவியர்கள் ஆர்வத்துடன் சதுரங்கப்போட்டியில் பங்கேற்றனர்.

வாணியம்பாடியில் கோலாகலமாக விழிப்புணர்வு செஸ் போட்டி!

இதையும் படிங்க:சரஸ்வதி மஹாலில் இருந்து திருடப்பட்ட ஓவியம்: அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details