திருப்பத்தூர்:மாமல்லபுரத்தில்சர்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வாணியம்பாடி நகராட்சி கே.பி.ஏ பேலஸில் விழிப்புணர்வு சதுரங்கப்போட்டி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கினார். உடன் வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழிப்புணர்வு சதுரங்கப்போட்டியைத்தொடங்கி வைத்தனர்.