திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கனவாய்புதூர் பகுதியில் கள்ளத்தனமாக எரிசாராயம் விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் அங்கு சென்ற மதுவிலக்கு காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான காவல் துறையினர், கனவாய்புதூர் பகுதி கோவிந்தராஜ் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 135 கேன்களில் பதுக்கி வைத்திருந்த 4725 லிட்டர் எரிசாராய கேன்களை கைப்பற்றினர்.