கோவையில் தனியார் லேத் நிறுவனம் ஒன்றில் திருநெல்வேலி மாவட்டம் மேலத்திடியூரரை சேர்ந்தவர்கள் வேலை பார்த்துவந்தனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் திரும்புவதற்காக கோயம்புத்தூரிலிருந்து திருநெல்வேலிக்கு 10 பேர் லோடு வேனில் பயணம் மேற்கொண்டனர்.
லாரி மீது லோடு வேன் மோதி விபத்து: சிறுமி உள்பட இருவர் உயிரிழப்பு!
தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது லோடு வேன் மோதிய விபத்தில் சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி அருகே சென்று கொண்டிருந்தபோது லோடு வேன், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இவ்விபத்தில் லோடு வேனில் பயணித்த மேலதிடியூரை சேர்ந்த சுமித்ரா (22), யாஷிகா (7) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், லோடு வேனில் பயணித்த 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.