தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் ஒரேநாளில் 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது!

தூத்துக்குடி: குண்டர் சட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 35 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

By

Published : Mar 2, 2021, 10:20 PM IST

goondas act
goondas act

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், காவல் துறையினர் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

அந்த வகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மார்ச் 2) ஒரேநாளில் மூன்று பேர் குண்டர்‌ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர். இந்தாண்டு ஜனவரி 1 முதல் இன்றுவரை போக்சோ வழக்குகளில் 7 பேர், கஞ்சா, போதைப் பொருள் கடத்தல் - விற்பனையில் ஈடுபட்ட 4 பேர், மணல் திருட்டு வழக்கில் ஒருவர் உள்பட மொத்தம் 35 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details