தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 16, 2021, 5:48 PM IST

ETV Bharat / state

மீன்பிடி தடைக்காலம் நிறைவு: மீனவர்கள் மகிழ்ச்சி!

61 நாள்கள் தடைக் காலத்துக்குப் பிறகு இன்று மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள், எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைத்துள்ளதுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

The fishing ban is over
The fishing ban is over

தூத்துக்குடி: மீன்பிடி தடைக்காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் சென்று திரும்பிய நிலையில், எதிர்பார்த்த மீன்வரத்து கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் முதல் சென்னை வரையிலான அனைத்து கடலோர மாவட்டங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மீன்பிடி தடை காலம் விதிக்கப்பட்டதை அடுத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில் ஆழ்கடலில் மீன்பிடிப்பிற்கான தடை நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில் இன்று (ஜூன்.16) அதிகாலை ஐந்து மணிக்கு தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தைச் சார்ந்த சுமார் 120 விசைப்படகுகள் மீன்பிடிப்பிற்கு ஆழ்கடலுக்குச் சென்றன.

மீனவர்கள்‌ மகிழ்ச்சி

61 நாள்கள் தடைக்காலம் முடிந்து, இன்று மீன்பிடிக்கச் சென்ற நிலையில், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீன் வியாபாரிகள் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் காலை முதலே குவியத் தொடங்கினர். காலை 8 மணி முதல் மீன்பிடிப்பிற்கு சென்ற விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில், மீன்வரத்து எதிர்பார்த்த அளவு கிடைத்துள்ளதாக மீனவர்கள்‌ மகிழ்ச்சி தெரிவித்தனர்.

அயிலை, வஞ்சிரம், பாறை, சாளை, காரல் மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் விளமீன், சீலா, வருவால் ஊழி, கருப்பு ஊழி உள்ளிட்ட அனைத்து மீன் வகைகளும் இன்று (ஜூன்.16) மீன்பாட்டின் மூலம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மீன்பிடி தடைக்காலம் நிறைவு

61 நாள் தடைக்காலத்துக்கு பின் மீன்பிடிப்பு

இதுகுறித்து மீனவர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”தமிழ்நாட்டில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பின்னர் இன்று கடலுக்குச் சென்று திரும்பி வந்துள்ளோம். அரசின் அறிவுறுத்தல்படி கரோனா கட்டுபாட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றி முகக்கவசம் அணிந்தும், கைகளை சோப்பு திரவத்தால் சுத்தப்படுத்தியும் சமூக இடைவெளியுடன் மீன்பிடித்தலில் ஈடுபட்டு திரும்பியுள்ளோம்.

61 நாள்கள் தடைக்காலத்துக்கு பின் மீன்பிடித்ததால் எதிர்பார்த்த அளவு மீன்வரத்து கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து அரசின் வழிக்காட்டுதலோடு மீன்பிடி தொழிலில் ஈடுபடத் தயாராக உள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க: பவானிசாகர் அணையின் நீர்வரத்து 6,278 கனஅடியாக அதிகரிப்பு!

ABOUT THE AUTHOR

...view details