தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 28, 2020, 10:40 AM IST

ETV Bharat / state

சாத்தான்குளத்தில் புதிய காவல் ஆய்வாளர் நியமனம்

தூத்துக்குடி : சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட நிலையில், புதிய காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து சேவியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

anthankulam-father-son-case
anthankulam-father-son-case

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் ஊரடங்கு விதிமீறல் காரணமாக கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் இருவரும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

காவல் துறையினர் அவர்களை சிறையில் அடித்து துன்புறுத்தியதால்தான் இருவரும் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு கட்சியினரும் பிரபலங்களும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆயுதப்படைக்கு மாற்றுப்பட்டதை அடுத்து, புதிய காவல் நிலைய ஆய்வாளராக வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் பர்னாந்து சேவியர் தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க:நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உடல்களை பெற்றோம்!

ABOUT THE AUTHOR

...view details