தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் 2ஆவது கட்டமாக கால்நடைகளுக்கு கோரிமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது. இதற்காக தேவையான மருந்துகள், தடுப்பூசிகள் ஏற்கனவே இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 260 கால்நடைகளுக்கும் அடுத்த பத்து நாட்களுக்குள் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம்.
தூர்வாரும் பணியை பொறுத்தவரையில் மொத்தமுள்ள 37 குளங்களில், 36 குளங்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு குளத்தில் பல்வேறு பிரச்னை காரணமாக தூர்வாரும் பணி மேற்கொள்ளப்படவில்லை. இதில் 28 குளங்களில் 100 சதவிகிதம் தூர்வாரும் பணி முடிவடைந்துவிட்டது. 10 குளங்களில் 70 சதவிகித பணிகள் முடிவடைந்துள்ளன. இந்த பணிகள் அனைத்தும் இந்த வாரத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அநேக இடங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 473 ஊருணிகள், 87 சிறு பாசன குளங்கள் தூர் வாரும் பணி 85 சதவிகிதம் நிறைவடைந்து விட்டது.