தமிழ்நாடு

tamil nadu

'ஆட்சியில் இருந்தால் ஒன்று; இல்லாவிட்டால் ஒன்று என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு'

By

Published : Jan 29, 2020, 1:54 PM IST

தூத்துக்குடி: பல்வேறு நலப்பணி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய நிகழ்ச்சியில் அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆட்சியில் இருந்தால் ஒன்று; இல்லாவிட்டால் ஒன்று என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு எனச் சாடியுள்ளார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தில் ரூ.1 கோடியில் சந்தை மேம்பாட்டுப் பணிகள் தொடக்க விழாவும், நபார்டு திட்டத்தில் ரூ.65 லட்சத்தில் வடக்கு சுப்பிரமணியபுரம் தார்ச்சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு பணிகளைத் தொடங்கிவைத்தார். மேலும் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் மூன்று பெண்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது:

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு ஆகம விதிகளின்படி நடைபெறும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இருமொழிக் கொள்கை என்ற அண்ணாவின் கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது.

ஆட்சியில் இருந்தால் ஒன்று; இல்லாவிட்டால் ஒன்று என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு என்று கடுமையாகச் சாடினார். உலகில் எந்த மூலையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களைக் காப்பாற்ற அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும்.

திமுக மீது பாய்ந்த கடம்பூர் ராஜு

மேலும் கரோனா வைரஸ் தாக்கம் உள்ள சீனா நாட்டில் உள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசு மூலம் தமிழ்நாடு அரசு முயற்சிகள் மேற்கொண்டுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க :40 ரூபாய்கு விற்பனையான வெங்காயம்: ஆர்வத்துடன் வாங்கிச்செல்லும் மக்கள்

ABOUT THE AUTHOR

...view details