தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய நிலையில் செய்தி போதும் "செய்தீ" வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார். தொடர்ந்து கூறுகையில்,அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை என்றும்,சாத்வீகமான, சகிப்புத்தன்மையுள்ள அடக்கமான அரசியல்வாதி இ.பி.எஸ், பாஜகவிற்கு 5 தொகுதிகளை வழங்கி முடக்கி விட்டார். அண்ணா நிறுவிய திமுகவை கைப்பற்றியவர் கருணாநிதி. அண்ணாயிசத்திற்கும், கருணாநிதியிசத்திற்கும் நடைபெறும் போட்டி தான் இந்த தேர்தல் என்றார்.
அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை : அதிமுக முன்னாள் எம்.பி கடம்பூர் ஜனார்த்தனம் கருத்து
தூத்துக்குடி: அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை என அதிமுக முன்னாள் எம்.பி கடம்பூர் ஜனார்த்தனம் தெரிவித்துள்ளார்.
அரசியலில் வெற்றிடம் இல்லை-கடம்பூர் ஜனார்த்தனம்
தூத்துக்குடியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் கேட்டுக்கொண்டால் பிரச்சாரம் மேற்கொள்வேன். மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவை மறந்து விட்டார். தளபதி என்பது திருடப்பட்ட வார்த்தை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.