தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 12, 2020, 8:11 PM IST

ETV Bharat / state

கந்துவட்டி கொடுமை: குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

தூத்துக்குடி: கந்துவட்டி கொடுமையால் சூழவாய்க்கால் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!
குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூழவாய்க்கால் பகுதியை சேர்ந்த தம்பதியினர், கணேசன் - வேளாங்கணி. இவர்கள் அதே பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவரிடம் ரூபாய் 3 லட்சத்தை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வட்டிக்கு பெற்றுள்ளனர்.

இந்த கடன் தொகை முழுவதையும் திருப்பி செலுத்திய பின்பும் இன்னும் வட்டிப்பணம் தரவேண்டும் என்று ஜோசப் தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளார். இதனால் மனவேதனையடைந்த கணேசன், அவரது மனைவி தங்களது குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்க இன்று (ஆகஸ்ட் 12) வந்தனர்.

குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

அப்போது யாரும் எதிர்பாராத விதமாக மண்ணெண்ணையை உடலில் ஊற்றிய கணேசன் தனது குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை செய்வதற்காக சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதனையும் படிங்க:கழுத்தை நெரித்த கந்துவட்டி; விஷம் குடித்த பெண்!

ABOUT THE AUTHOR

...view details