தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 25, 2020, 7:45 PM IST

ETV Bharat / state

மூதாட்டியை கழிவறையில் அடைத்து கொடுமை - வளர்ப்பு மகன், மருமகள் கைது

தூத்துக்குடி: மூதாட்டியை கழிவறையில் வைத்து கொடுமைப்படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மூதாட்டி
மூதாட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோட்ஸ் நகரைச் சேர்ந்தவர் மரியமிக்கேலம்மாள் (95). இவரது வளர்ப்பு மகன் நிகோலஸ் (42), மருமகள் இந்திரா (34). இதனிடையே, நிகோலஸ் இந்திராவுடன் சேர்ந்த தனது வளர்ப்பு தாயை கொடுமைப்படுத்திவந்ததாக மாவட்ட சமூக நலத் துறை அலுவலர்களுக்கு புகார்கள் வந்தன.

இந்தப் புகாரின்பேரில், சமூக நலத் துறை அலுவலர்களும், காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினரும் நிகோலஸ் வீட்டில் ஆய்வுசெய்தனர்.

அப்போது, வீட்டின் கழிவறையில் மரியமிக்கேலம்மாள் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் மரியமிக்கேலம்மாள் நிகோலஸின் பெரியம்மா எனவும் தெரியவந்தது.

மூதாட்டியை கழிவறையில் அடைத்து கொடுமை

இதையடுத்து, சமூக நலத் துறையைச் சேர்ந்த அலுவலர் கவிதா, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார்செய்தார். இந்தப் புகாரின்பேரில் முதியோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி நிகோலஸ், இந்திரா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். இதையடுத்து, வீட்டிலிருந்து மீட்கப்பட்ட மூதாட்டியை காப்பகத்தில் அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: வட்டி முரளி வீடு மற்றும் நகைக்கடையில் சோதனை..!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details