தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 11, 2019, 8:12 PM IST

ETV Bharat / state

வஞ்சகம், சூழ்ச்சியே வேலூரில் திமுக வெற்றிக்கு காரணம்...

திருவாரூர்: வஞ்சகம், சூழ்ச்சியே வேலூரில் திமுக வெற்றிக்கு காரணம் என, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விமர்சித்துள்ளார்.

அமைச்சர் காமராஜ்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட சொரக்குடி பகுதியில் குடிமராமத்து ஏரி தூர்வாரும் பணியியை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'திருவாரூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1942 குளங்கள் தூர் வார இருக்கின்றன. ஒரு குளத்திற்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் என நிதி ஒதுக்கி, தற்போது இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. சம்பா சாகுபடி முடியும்வரை தண்ணீர் திறந்து விட இயலாது. கணக்கிட்டுத்தான் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்துவிடப்படும். வேலூர் மக்களவைத் தேர்தல் வைணவத்தில் கடைசி நேரத்தை பிட்சம் என்று சொல்வார்கள், அந்த கடைசி நேரத்தின் பிட்சமே வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெறக் காரணம்' என தெரிவித்தார்.

வஞ்சகம், சூழ்ச்சியே வேலூரில் திமுகவின் வெற்றிக்கு காரணம்...

ABOUT THE AUTHOR

...view details