திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி. ஆர் பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ‘தமிழகம் முழுவதும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகள் தேவையான அளவு பெய்ததால், அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வருகிறது. சம்பா மற்றும் மானாவாரி சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பயிர்களும் வளமாக வளர்ந்து வரும் நிலையில் அக்டோபர் 15 முதல் நவம்பர் 15ஆம் தேதிக்குள் மேலுரமாக யூரியா உரமிட உகந்த காலமாகும்.
தற்போது யூரியா தட்டுப்பாட்டால் உரிய காலத்தில் உரமிட முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள். இதனால் சாகுபடி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2012 முதல் தொடர்ந்து ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் மகசூல் இழப்பை சந்தித்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடப்பாண்டு மழை கை கெடுத்ததால் நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலுள்ள விவசாயிகளுக்கு, யூரியா உரமிட முடியாததால் மகசூல் இழப்பு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.