தமிழ்நாடு

tamil nadu

திருவாரூரில் கொட்டித் தீர்த்த மழை நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்!

By

Published : Jul 24, 2020, 4:33 PM IST

திருவாரூர்: மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக குறுவை நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சுமார் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள். நேற்று (ஜூலை 24) பெய்த கனமழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "ஊரடங்கு நேரத்தில் பல்வேறு இடர்பாடுகளுக்கிடையே கடன்கள், நகைகளை அடமானம் வைத்து குறுவை சாகுபடியில் ஈடுபட்டுவருகிறோம். ஏக்கருக்கு 30ஆயிரம் முதல் 40ஆயிரம் ரூபாய்வரை செலவு செய்து நல்ல விளைச்சல் காணும் என்ற நம்பிக்கையில் இருந்துவந்தோம்.

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் கவலை

ஆனால் நேற்று பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அனைத்தும் வயலில் மடிந்துவிட்டன. இதனால் கூலி ஆள்களும் வேலைக்கு வருவதற்கு தயங்குகின்றனர்.

நெற்பயிர்கள் முழுவதும் வயலில் சாய்ந்துள்ளதால் அறுவடைக்கு இயந்திரங்கள் அதிக நேரம் எடுத்துக்கொள்கின்றன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

இதனால் மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனை கவனத்தில் கொண்டு நெல் அறுவடை இயந்திரத்தை குறைந்த வாடகைக்கு விட வேண்டும்" என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: கருகும் குறுவை நெற்பயிர்; சம்பா சாகுபடியும் கேள்விக்குறி - பி. ஆர். பாண்டியன் வேதனை

ABOUT THE AUTHOR

...view details