தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 8, 2019, 12:19 PM IST

ETV Bharat / state

ஆரணியில் மூதாட்டி கொலை - நகை கொள்ளை

திருவண்ணாமலை: ஆரணி அருகே தனியாக வசித்துவந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான மூதாட்டியை கொடூரமான முறையில் கொலைசெய்து நகை, பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முனிவாந்தாங்கல் கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை லூர்துமேரி (69). இவர் திருமணம் செய்துகொள்ளாமல் வீட்டில் தனியாக வசித்துவந்தார். அவருடன் உடன்பிறந்தவர்கள் எட்டு பேர் உள்ளனர். உறவினர்கள் வெளிநாட்டிலும் வெளிமாநிலத்திலும் வசித்துவருவதால் லூர்துமேரி மட்டும் வீட்டில் தனியாக இருந்துவந்தார்.

இதனை நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் நேற்று நள்ளிரவு வீட்டினுள் புகுந்து நகை, பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவரை கொடூரமான முறையில் கொலை செய்தனர். அதனைத் தொடர்ந்து லூர்துமேரி உறவினர் டான்போஸ்கோ என்பவர் வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது அவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் தலைமையில் காவல் துறையினர் குவிக்கபட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும், மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் தேடுதல் நடைபெற்றது.

அதுமட்டுமின்றி, மாவட்ட கைரேகை நிபுணர் காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரராஜ் தலைமையில் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கைரேகை, தடயங்களை சேகரித்தனர். லூர்துமேரியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details