தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 16, 2020, 11:55 PM IST

ETV Bharat / state

கள்ளச்சாராயம் காய்ச்சிய மூன்று பேர் கைது

திருவண்ணாமலை: ஜமுனாமரத்தூரில் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சாராய ஊறலை அழித்த காவல் துறையினர்
சாராய ஊறலை அழித்த காவல் துறையினர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமுனமரத்தூர் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் அதிகளவில் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு நாள்தோறும் புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது.

இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் ஜமுனமரத்தூர் உதவி ஆய்வாளர் லட்சுமணன் உள்ளிட்ட காவலர்கள் மலைப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு செய்தனர். அப்போது, மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதைக் கண்டறிந்தனர். பின்னர், கள்ளச்சாராயம் விற்ற முத்துச்சாமி (45), ராமகிருஷ்ணன் (27), பிரபாகரன் (31) ஆகியோரை அவர்கள் கைது செய்தனர்.

சாராயத்தைக் கொட்டும் காவல் துறையினர்

மேலும், அங்கிருந்த 2,000 லிட்டர் சாராய பேரல் அழிக்கப்பட்டு, சாராய கடத்தலுக்குப் பயன்படுத்திய நான்கு இருசக்கர வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூவரையும் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சாலை நடுவில் சாராய பாட்டில்களைத் தொங்கவிட்டு பொதுமக்கள் மறியல்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details