திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமுனமரத்தூர் மலைப்பகுதிகளில் கள்ளச்சாராயம் அதிகளவில் காய்ச்சப்படுவதாக காவல் துறையினருக்கு நாள்தோறும் புகார் வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிபி சக்ரவர்த்தி குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில் ஜமுனமரத்தூர் உதவி ஆய்வாளர் லட்சுமணன் உள்ளிட்ட காவலர்கள் மலைப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு செய்தனர். அப்போது, மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியதைக் கண்டறிந்தனர். பின்னர், கள்ளச்சாராயம் விற்ற முத்துச்சாமி (45), ராமகிருஷ்ணன் (27), பிரபாகரன் (31) ஆகியோரை அவர்கள் கைது செய்தனர்.