திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அருகே உள்ள துளுவன்குட்டை பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் எரிசாராயம் காய்ச்சுவதற்காக 500 லிட்டர் சின்டெக்ஸ் மூலம் ஊறல் தயார் செய்து வைத்திருப்பதாக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார் மேற்பார்வையில், வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓலப்பாடி கிராமத்திற்கு அருகேயுள்ள துளவன்குட்டை என்ற இடத்தில் காவல் துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.