திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த போந்தவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (22). நேற்று (டிச.2) இவர் தனது நண்பர்களுடன் ஆரணி ஆற்றில் குளித்தார். பின்னர் வீடு திரும்பியபோது கால் தவறி சுபாஷ் அங்குள்ள சுழலில் சிக்கி உயிரிழந்தார்.
உடனே கும்மிடிப்பூண்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் உடலை தேடினர்.