தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாரம் சரிந்து கூலி தொழிலாளி பலி!

திருவள்ளூர்: புழல் அருகே கட்டட வேலை செய்யும் போது சாரம் சரிந்து விழுந்ததில் கூலித் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Apr 2, 2019, 1:51 PM IST

சாரம் சரிந்து கூலி தொழிலாளி பலி!

புழல் அடுத்த கதிர்வேடு பிர்லா அவென்யூ இரண்டாவது தெருவில் பாலாஜி என்பவருடைய இடத்தில் புதியதாக வீடு கட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டுமான பணிகளுக்கு திருமுல்லைவாயல் பகுதியை சேர்ந்த கட்டட மேஸ்திரிகளான ராமு, ராஜா ஆகிய இருவர் வேலைக்கு கூலி ஆட்களை பணியில் அமர்த்தி கட்டுமான பணிகள் செய்து வருகின்றனர்.

அவரிகளிடம் திருமுல்லைவாயல் கலைஞர் கருணாநிதி தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி குமாரவேல் பணியாற்றி வருகிறார். இவருக்கு சுபாஷினி(32) என்ற மனைவியும், கௌசிகா, சுருதி என்கிற இரு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில் அவர் வழக்கம் போல் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து 45 அடி உயரத்தில் உள்ள சாரம் சரிந்து கீழே விழுந்தது.

இதில் பாபுவுக்கு நெஞ்சில் பலத்த காயம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இதையடுத்து பாபுவின் உறவினர்கள் கட்டட உரிமையாளர் பாலாஜி, மேஸ்திரி ராமு, ராஜா மீது புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மூவரையும் கைது செய்த புழல் போலீஸார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details