தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 25, 2019, 5:34 PM IST

ETV Bharat / state

அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு..!

திருவள்ளூர்: கிணற்றில் அடையாளம் தெரியாத அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுப்பட்டதைத் தொடர்ந்து, நகரக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் மணவாள நகர்ப் பகுதியில் அரசு மதுபானக்கடை இயங்கி வருகிறது. இங்கு மது பிரியர்கள் மது அருந்துவதற்காக அருகில் உள்ள கிணற்றின் அருகே சென்றபோது துர்நாற்றம் வீசியுள்ளது. உடனே கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தபோது, அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தூக்கிட்டு கிணற்றுக்குள் தொங்கிய நிலையில இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து திருவள்ளூர் நகரக் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி அவர்களுக்குத் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், நேரில் வந்து அழுகிய நிலையில் உள்ள சடலத்தை மீட்டனர். பின்னர், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு தகவலளித்து, சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு செய்தனர்.

இதனையடுத்து காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details