தமிழ்நாடு

tamil nadu

திருவள்ளூரில் கஞ்சா கடத்திய இருவர் கைது: 8 கிலோ கஞ்சா பறிமுதல்

By

Published : Nov 3, 2020, 3:17 PM IST

திருவள்ளூர்: இருசக்கர வாகனத்தில் 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

two-arrested-for-smuggling
two-arrested-for-smuggling

திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் நவீன சோதனைச் சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனத்தை மடக்கிய போது அந்த வாகனம் நிற்காமல் சென்றது.

அதனைத் துரத்திச் சென்ற காவல் துறையினர் சிப்காட் தொழிற்பேட்டை அருகே மடக்கிப் பிடித்தனர். பின்னர், அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், கடத்தலில் ஈடுபட்ட இருவர் புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் (23), ராஜேஷ் (24) என்பதும் இவர்கள் விஜயவாடாவில் இருந்து சென்னை போரூருக்கு கஞ்சா கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்டவை

பின்னர், அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சாவையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த சிப்காட் காவல் துறையினர், இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அடுத்தக்கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:கடற்கரை கிராமத்தில் கரை ஒதுங்கிய 56 கிலோ எடையுள்ள கஞ்சா பார்சல்கள் பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details