தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 24, 2020, 6:50 PM IST

Updated : Nov 24, 2020, 7:03 PM IST

ETV Bharat / state

மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு தொட்டி திறந்து வைப்பு!

திருவள்ளூர்: அரசு தலைமை மருத்துவமனையில் மக்களின் பயன்பாட்டிற்காக பாரதிய பிரவாசி பரிஷத் அமைப்பு சார்பில் கட்டப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொட்டி இன்று (நவம்பர் 24) திறந்து வைக்கப்பட்டது.

Purified drinking water tank open for public use!
Purified drinking water tank open for public use!

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக கட்டட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் குடிநீர் பயன்பாட்டிற்கு ஏற்கனவே இருந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் இடிக்கப்பட்டது.

இந்நிலையில், நோயாளிகளின் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்காக, பாரதிய பிரவாசி பரிஷத் அமைப்பின் மூலம் ரூ. 2 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு தொட்டியை மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி, ரிப்பன் வெட்டி இனிப்புகள் வழங்கி இன்று தொடங்கி வைத்தார்.

பாரதிய பிரவாசி பரிஷத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மனோஜ்குமார் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் ராஜ்குமார், பிரபுசங்கர், ஜெகநாதன், பாரதிய பிரவாசி பரிஷத் அமைப்பின் மத்திய தலைவர் அஜய்திவாரி, மாநில தலைவர் சிங் மற்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: சென்னையில் கடும் கடல் சீற்றம்!

Last Updated : Nov 24, 2020, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details